மதுரையில் சாலை சீரமைப்பு பணிகளுக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

மதுரையில் சாலை சீரமைப்பு பணிகளுக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

1 mins read
33537124-6cd9-469f-8baf-445e657d86b8
மதுரையில் உட்சாலைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. - படம்: சமயம்
Google News Preferred Icon

மதுரை: மதுரை மாநகராட்சியில் சாலைகளைச் சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தமிழ்நாடு நகர்ப்புறச் சாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின் (TURIP) கீழ் செயல்படுத்தப்படுகிறது.

மழை, குடிநீர்/கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகளால் சேதமடைந்த சாலைகளோடு 5 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்படாத சாலைகளும் புதுப்பிக்கப்படும்.

மீனாட்சி அம்மன் கோவில் பகுதி, அரண்மனைச் சாலை, வில்லாபுரம் பகுதிகளில் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. நியூ மகாலியப்பட்டி, நியூ இராமநாதபுரம் சாலைகள் சீரமைப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

முக்கியச் சாலைகள் சீரமைக்கப்பட்டாலும் பல சிறிய உட்சாலைகள் இன்னும் சேதமடைந்திருப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட பணிகள் பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதிக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்