'ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி இருப்பார்கள்'

'ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி இருப்பார்கள்'

2 mins read
dd802c28-76e0-496f-8510-228c9c9e519a
படம்: ஊடகம் -
Google News Preferred Icon

கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு காரணமாக 'மாஸ்டர்' படத்தின் வெளியீடு தள்ளிப்போய் இருக்கிறது.

இதனால் விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த படக்குழுவும் சோகத்தில் மூழ்கி யுள்ளது.

இந்நிலையில் கொரோனா கிருமி பாதிப்பு தலைதூக்கி இருக்காவிட்டால் 'மாஸ்டர்' படம் இந்நேரம் வெளியாகி இருக்கும் என்றும் ரசிகர்கள் அதைக் கொண்டாடி இருப்பார்கள் என்றும் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

இவர் அமலா பால் நடித்த 'ஆடை' படத்தை இயக்கியவர். 'மாஸ்டர்' படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

"மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றபோது காற்று மாசு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. அதன்பின்னர் சில போராட்டங்கள் நிகழ்ந்தன. அதையடுத்து வருமான வரித்துறை சோதனை.

"இப்­போது கொரோனா கிரு­மித் தொற்று. ஒரு ரசி­க­னாக இது மிகுந்த வருத்­தத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது," என்று தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார் ரத்­ன­கு­மார்.

லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் உரு­வாகி உள்­ளது 'மாஸ்­டர்' படம். ஏப்­ரல் 9ஆம் தேதி (நேற்று) இந்­தப் படத்தை வெளி­யிட படக்­குழு­வி­னர் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

விஜய்­யின் 64ஆவது பட­மான இதில் அவ­ரது ஜோடி­யாக மாள­விகா மோக­ன­னும் வில்­ல­னாக விஜய் சேது­ப­தி­யும் நடித்­துள்­ள­னர்.

மேலும் சாந்­தனு, ஆன்ட்­ரியா, கௌரி கிஷன், அர்­ஜுன்­தாஸ் உள்­ளிட்­டோர் முக்­கி­ய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர். சேவி­யர் பிரிட்டோ தயா­ரித்­துள்­ளார்.

மிகுந்த எதிர்­பார்ப்பை ஏற்­படுத்­தி­யுள்ள இப்­ப­டத்­தில் விஜய் அர­சி­யல் ரீதி­யில் சில கருத்­து­களை முன்­வைக்க வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இத­னால் அர­சி­யல் களத்­தி­லும் இந்­தப் படம் கூர்ந்து கவ­னிக்­கப்­படு­கிறது.