சிவகார்த்திகேயன் எனக்குப் போட்டி அல்ல; என் படங்களைப் பார்த்து வளர்ந்தவர் : ஜீவா பேச்சால் இணையத்தில் மோதல்!

சிவகார்த்திகேயன் எனக்குப் போட்டி அல்ல; என் படங்களைப் பார்த்து வளர்ந்தவர் : ஜீவா பேச்சால் இணையத்தில் மோதல்!

1 mins read
f7fe6ca1-c468-42fb-8c7e-8e025348ddbf
சிவகார்த்திகேயன், ஜீவா, கார்த்திக். - படம்: ஒன் இந்தியா
Google News Preferred Icon

நடிகர் ஜீவா தனது நேர்காணலில் தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோரைத் தனது போட்டியாளர்களாகக் கருதுகிறேன் என்றும் ஆனால், தனது படங்களைப் பார்த்து வளர்ந்த சிவகார்த்திகேயனை அவ்வாறு கருதவில்லை என்றும் கூறியிருப்பது திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது திரைப்பயணம் குறித்துப் பேசிய ஜீவா, “தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோரை மட்டுமே நான் எனக்குப் போட்டியாளர்களாகக் கருதுகிறேன்,” என்றார். சிவகார்த்திகேயன் பற்றிக் கேட்டபோது, “சிவகார்த்திகேயன், கார்த்தி எல்லாம் அடுத்த தலைமுறை நடிகர்கள். சொல்லப்போனால் சிவகார்த்திகேயன் என் படங்களைப் பார்த்து வளர்ந்தவர்,” என்று பதிலளித்தார்.

இந்தக் கருத்து வெளியான சிறிது நேரத்திலேயே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொந்தளிக்கத் தொடங்கினர். “திரைத்துறையில் வளர்ச்சி என்பது உழைப்பால் வருவது; மூத்தவர் என்பதால் மட்டும் வந்துவிடுவதில்லை. இன்று வசூல் சாதனையில் சிவகார்த்திகேயன் எங்கே இருக்கிறார் என்பது ஊருக்கே தெரியும்,” எனப் பதிவிட்டு வருகின்றனர்.

மறுபுறம், “அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? ‘ராம்’, ‘ஈ’, ‘கற்றது தமிழ்’ என ஜீவா சாதித்த காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கே வரவில்லை. அவர் ஒரு மூத்த நடிகராக யதார்த்தத்தையே பேசியுள்ளார்,” என ஜீவா ரசிகர்கள் ஆதரவுக் குரல் கொடுக்கின்றனர்.

சிவகார்த்திகேயனைத் தனக்கு இளையவராகவும் தனது படங்களைப் பார்த்து வளர்ந்தவராகவும் ஜீவா குறிப்பிட்டது ஆரோக்கியமான விமர்சனமா அல்லது தேவையற்ற ஒப்பீடா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்