ரஜினி படத்தைத் தொடர்ந்து தெலுங்குக்குச் செல்லும் நெல்சன்

ரஜினி படத்தைத் தொடர்ந்து தெலுங்குக்குச் செல்லும் நெல்சன்

1 mins read
2f09f5c7-2ba0-405a-ac17-d8447c863217
இயக்குநர் நெல்சன் திலீப்குமார். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ரஜினியின் படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து படம் இயக்க இருக்கிறார் நெல்சன்.

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார்.

இவர் அடுத்தபடியாக மீண்டும் ரஜினியை வைத்து ‘ஜெயிலர்-2’ படத்தை இயக்குவதற்குத் தயாராகி வருகிறார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வரும் ரஜினி, அதன்பிறகு ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு ‘பான் இந்தியா’ படத்தை இயக்கப் போகிறார் நெல்சன்.

ஜூனியர் என்டிஆரிடம் கதையைச் சொல்லி சம்மதம் வாங்கிவிட்ட அவர், அப்படத்திற்கான மற்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்