‘கொடி’, ‘தள்ளிப் போகாதே’, ‘சைரன்’, ‘டிராகன்’, ‘பைசன்’, உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.மலையாளம், தெலுங்குப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
தற்போது அனுபமா பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார்.அவர் உளவியல் சார்ந்த அச்சமூட்டும் கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை ஷான் இயக்குகிறார்.
பாலிவுட்டில் ‘ரஸ்டம்’, ‘டாய்லெட்: ஏக் பிரேம் கதா’ஆகிய படங்களைத் தயாரித்தவர்கள் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அனுபமா பரமேஸ்வரனுடன் இணைவதைச் சிறப்பானதாக உணர்கிறோம். பல மொழிகளில் நடித்து வரும் அவர் திறமையானவர். இந்தப்படம் ஒரு நடிகையாக அவருக்குச் சிறப்பானதாக இருக்கும்,” என்று படத்தின் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.

