விடுமுறை நாள்களில் மண்டாய் ஆய்வுப்பணி முகாம்

விடுமுறை நாள்களில் மண்டாய் ஆய்வுப்பணி முகாம்

1 mins read
d3cb6f1e-517b-491d-a0c6-5535725b76fa
முகாமிட்டு இரவு நேரத்தில் டால்பின்னைப்பார்க்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

எல்லா ஆய்வுப் பணிகளுக்கும் ஒரு சிறந்த பயணம்! பள்ளி விடுமுறையின்போது ஒரு புத்தம் புதிய சாகசத்தை அனுபவித்து மகிழுங்கள். 

இம்முகாமில் ஆறு வயதிலிருந்து 10 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். 

இம்முகாம் மே 27 முதல் மே 29 வரையிலும் ஜூன் 3 முதல் ஜூன் 5 வரையிலும் நடைபெறும்.

அனைத்தையும் உள்ளடக்கிய மூன்று நாள் முகாமில் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், ரிவர் சஃபாரி மற்றும் பறவைகள் மகிழ்வனம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

 மேலும், சுவாரசியமான சுற்றுலா மற்றும் விலங்குடனான, ஆ மெங் டெரஸ் மற்றும் பென்குயின் கோவ் உணவகத்தில் மதிய உணவு, நினைவில் வைத்துக்கொள்ளும் பரிசாக ஒரு புகைப்படம் மற்றும் பங்கேற்பதற்கான சான்றிதழ் போன்றவை வழங்கப்படும். 

இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். கட்டணம் $450.

பெரிய ஆமையைச் சந்திப்பது, காட்டின் சுற்றுலா, ‘அமேசான் காட்டில்’ இருக்கும் நீர் விலங்குகளைச் சந்திப்பது, நீர் நாய் உடனான சந்திப்பு, ‘குவோக் குழு இறக்கைகள் ஆஃப் ஆசியா’ சுற்றுப்பயணம், மற்றும் பறவைகளுடன் விளையாட்டுகள் போன்றவை முகாமின் சிறப்பு அம்சங்கள்.

உடனே இம்முகாமிற்கு பதிவுசெய்து, விலங்குகளுடன் ஒரு சுவாரசியமான பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.

மேல் விவரங்களுக்கு மண்டாய் வனவிலங்கு காப்பகத்தின் இணையத்தளத்தை நாடுங்கள்.

குறிப்புச் சொற்கள்