நன்றியுள்ள விவசாயி

நன்றியுள்ள விவசாயி

2 mins read
d2d257e2-918d-42ff-b923-9c91408160b2
வேலனும் அவர் குடும்பத்தினரும் பொங்கல் பொங்கி கொண்டாடுகிறார்கள். - படம்: செயற்கை நுண்ணறிவு
Google News Preferred Icon

ஒரு கிராமத்தில் வேலன் என்பவர் தன் மனைவி, மகன், மகளுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு விவசாயம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். அவரிடம் ‘லட்சுமி’ என்ற ஒரு பசுமாடு இருந்தது.

வேலன் தினமும் காலையில் எழுந்து வயலுக்குச் செல்வார். சூரியன் உதித்ததும், “சூரிய தேவனே, என் பயிர்களுக்கு வெளிச்சம் கொடுப்பதற்கு நன்றி!” என்று வணங்குவார்.

மழை பெய்தால், “வருண பகவானே, தண்ணீர் தந்ததற்கு நன்றி!” என்று சொல்வார். அவருடைய மாடு லட்சுமி, வயலை உழுது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது.

மாதங்கள் கடந்தன. வேலன் நட்ட நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராகின.

வேலன் “என் பயிர்கள் இவ்வளவு நன்றாக வளர சூரியன், மழை, உழைத்த என் மாடு லட்சுமி ஆகியோர்தான் காரணம். இவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது?” என்று யோசனை செய்தார்.

அப்போதுதான் ‘தை’ மாதம் பிறந்தது. வேலன் ஒரு புது மண்பானை வாங்கினார். அதில் புது அரிசி, வெல்லம், பால், முந்திரி சேர்த்து திறந்தவெளியில் வேலனின் மனைவி அடுப்பு மூட்டினார். சூரியன் நேராகப் பார்த்து ஒளி வீசும்போது, பானையில் இருந்த பால் பொங்கி வழிந்தது.

வேலனும் அவர் குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக “பொங்கலோ பொங்கல்!” என்று முழக்கமிட்டார்கள்.

முதலில் இனிப்புப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து நன்றி சொன்னார்கள். மறுநாள், தன் மாடு லட்சுமியை நீராட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலை அணிவித்து அதற்குப் பொங்கல் ஊட்டி மகிழ்ந்தார்கள்.

நீதி: நமக்கு உணவளிக்கும் இயற்கைக்கும் உதவி செய்யும் விலங்குகளுக்கும் நாம் எப்போதும் நன்றி சொல்ல வேண்டும். அதுவே பொங்கல் பண்டிகை!

குறிப்புச் சொற்கள்