காற்பந்தாட்ட கிண்ணப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற அண்ணன் தங்கை

காற்பந்தாட்ட கிண்ணப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற அண்ணன் தங்கை

1 mins read
a127f556-b783-446e-971e-06e211de07b1
சிண்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், காற்பந்துப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுடன் கலந்துரையாடினார். - படம்: சிண்டா
multi-img1 of 4
Google News Preferred Icon

சிறு வயதிலிருந்தே காற்பந்தாட்டத்தில் பேரார்வம் கொண்டுள்ளார், 8 வயதான முகமது சஃப்வான். தன் மாமாவுடன் காற்பந்து விளையாட்டுகளைத் தொலைக்காட்சியில் கண்டு ரசித்த இவருக்கு அந்த ஆட்டத்தை விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற நாட்டமும் வளர்ந்தது. 7 வயதில், சஃப்வான் காற்பந்து வகுப்புகளில் துடிப்புடன் பங்கேற்கத் தொடங்கினார்.

இவ்வாண்டு யூனிட்டி காற்பந்தாட்ட கிண்ணப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்றார், சஃப்வான். “எனக்கு காற்பந்து விளையாடுவது மிகவும் பிடிக்கும். எனக்கு விளையாட்டுகளில் வெற்றி பெறும்பொழுது கிடைக்கும் இன்பம் ஈடற்றது. அதுவும் அப்போட்டியில் பங்கேற்றதன் வழி நான் நிறைய புது நட்புறவுகளை வளர்த்துக்கொண்டேன்,” என்று சஃப்வான் இன்புற்றுக் கூறுகிறார்.

காற்பந்தில் சஃப்வான் கொண்டுள்ள எல்லையில்லா நாட்டத்தைக் கண்டு வளர்ந்தார் அவருடைய தங்கை, 7 வயதான நூர் ஷஃபிகா. இவரும் யூனிட்டி காற்பந்தாட்டக் கிண்ணப் போட்டியில் இவ்வாண்டு முதன்முறையாகப் பங்கேற்றார்.

“இந்தப் போட்டியில் பங்கேற்றது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் என் நண்பர்களுடன் ஒற்றுமையாக விளையாடக் கற்றுக்கொண்டேன். எனக்கு காற்பந்து மீது உள்ள நாட்டம் அதிகரித்துள்ளது,” என்று சுட்டியாகக் கூறினார் ஷஃபிகா.

குறிப்புச் சொற்கள்
மாணவர்கள்காற்பந்துஅண்ணன்-தங்கை